சச்சினுக்காக உலகக் கோப்பை வெல்வது என்பது சரியல்ல : கபில்தேவ்

வியாழன், 03 பிப்ரவரி 2011 11:16 பாபுஜி Sports
E-mail அச்செடுக்க

“சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் எனக் கூறுவது மற்ற 14 வீரர்களையும் இழிவு படுத்துவது போன்றது” என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்திய அணித்தலைவர் தோனி, காம்பிர் மற்றும் சில முன்னாள் வீரர்கள் சச்சினுக்காக(வாவது) இம்முறையேனும்  உலக கோப்பையை இந்தியா  வெல்ல வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் தலைவரும், 28 ஆண்டுகளுக்கு முன், 1983 ல் இந்திய அணி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவருமான கபில்தேவிடம் கேட்ட போது “தோனி, காம்பிர் மற்றும் சில முன்னாள் வீரர்கள் சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறு. சச்சின் மட்டும் கிரிக்கெட் விளையாடவில்லை. கிரிக்கெட் என்பது அணியாக விளையாடப்படும் விளையாட்டு. இவ்வாறு கூறுவது மற்ற 14 வீரர்களையும் இழிவு படுத்துவது போன்றது. சச்சின் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இம்முறை எந்த அணி உலக கோப்பை வெல்லும் என்பதைத் தற்போது கூற இயலாது. ஏழு அணிகளுக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன். இதில் இந்திய அணியும் ஒன்று. இதுவரை தொடரை நடத்திய அணி, கோப்பை வென்றதில்லை. இம்முறை அதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது” என்று கூறி அதிரடித்துள்ளார்

 

thanks to inneram.com

 

Leave a comment